fbpx

ஏல சீட்டு நிறுவனம் நடத்தி 96 லட்ச ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி அதிரடி கைது….! கோவை காவல்துறையினர் நடவடிக்கை….!

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் ரமேஷ்குமார், சுமதி என்ற தம்பதியினர் ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 2022 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 86 சீட்டு பிரிவுகளின் கீழ் 41 பேர் முதலீடு செய்து இருக்கிறார்கள்.

இவர்களில் சூலூர் கே.கே.சாமி நகரை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் ரூபாய் 11.80 லட்சம் பணத்தை சீட்டு பணமாக செலுத்தியதாகவும், ஆனால் தான் கட்டிய பணம் எனக்கு திரும்பி கிடைக்கவில்லை என்றும் கோவை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, மேலும் சிலர் இதேபோல புகார்களை வழங்கினர். ஆகவே காவல்துறையை சார்பாக விசாரணை நடத்தப்பட்டதில் 43 பேர் 86 சீட்டு பிரிவுகளில் 96 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததும் அவர்கள் கட்டிய பணத்தை அந்த தம்பதியினர் திரும்பி கொடுக்காமல் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

இது குறித்து ரங்கநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ்குமார் அவருடைய மனைவி சுமதி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அதோடு இந்த மோசடியும் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றன.

Next Post

ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டி படுகொலை…..! மர்ம கும்பலுக்கு காவல்துறை வலை வீச்சு…..!

Sun Apr 9 , 2023
சென்னை போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர் பொன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 இருசக்கர வாகனங்களில் ஆறு பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர். ஆகவே அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையின் மீது மோதி தடுமாறி அவர் […]

You May Like