fbpx

மீண்டும் பாக்கியலட்சுமியுடன் இணைய போகிறாரா கோபி….? பாக்கியலட்சுமி சீரியலில் நடைபெற உள்ள அடுத்தடுத்த திருப்பங்கள்…..!

பாக்கியலட்சுமி தொடரில் தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் மனம் உடைந்து போன கோபி மது குடித்துவிட்டு தெருவோரத்தில் விழுந்து கிடந்தார். அவரை அவருடைய முன்னாள் மனைவி பாக்கியலட்சுமி தான் வீட்டிற்கு அழைத்து வந்து சேர்த்தார். இதன் காரணமாக ராதிகா கடும் கோபத்திற்கு ஆளானார். அதன் பிறகு போதையில் இருந்த கோபி ராதிகாவை திட்டி உள்ளார்.

கோபி தன்னைத் திட்டியதால் கோபமடைந்த ராதிகா வீட்டை விட்டு வெளியேறினார். ஆகவே கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சித்தார். இந்த நிலையில், எதிர்வரும் வாரத்தில் பாக்கியலட்சுமி தொடரில் நடைபெற உள்ள நிகழ்வுகள் தொடர்பான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் கோபியின் தாய் கோபியிடம் சென்று மீண்டும் நம்முடைய வீட்டிற்கு வந்துவிடு என்று அழைக்கிறார். இதனை மறைந்திருந்து கேட்ட ராதிகா அதிர்ச்சியில் உறைகிறார். அதன் பிறகு பாக்யாவை சந்திக்கும் ராதிகா மறுபடியும் கோபியுடன் சேர்ந்து வாழ போகிறீர்களா? என்று பாக்யாவை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் இதற்கு பதில் அளித்த பாக்யா நான் தூக்கி எறிந்த வாழ்க்கையை தான் தற்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ராதிகா கடும் கோபத்திற்கு ஆளாகிறார். இனி இந்த தொடரில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Post

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு வரும் மிகப்பெரிய ஆபத்து…! சோகத்தின் ரசிகர்கள்….!

Sun Apr 9 , 2023
தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2 இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள் இத்தகைய நிலையில், பொன்னியின் செல்வன்.2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் தான் ஐபிஎல் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதோடு […]

You May Like