fbpx

தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை…..! வெளியானது அதிரடி அறிவிப்பு எதற்காக தெரியுமா…..?





தமிழ்நாட்டில் நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோடு பகுதியில் வணிகர் தின மாநாடு நடைபெற இருப்பதால் தமிழ்நாடு முழுவதிலும் நாளை கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்திருக்கிறது. அதேபோலவே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையும் நாளை செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள், தினசரி சந்தைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் நாளை விடுமுறை வழங்கி இருப்பதால் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வணிகர்கள் லட்சக்கணக்கில் குடும்பத்துடன் பங்கேற்றுக் கொள்வார்கள் என்று அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய தலைவர் கூறியிருக்கிறார்.

அத்துடன் வணிகர்கள் தினத்தை முன்னிட்டு மே மாதம் 5ம் தேதி அதாவது, நாளைய தினம் ஈரோடு பகுதியில் வணிகர்கள் தின மாநாடு நடைபெற இருப்பதால், இந்த மாநாட்டிற்கு வியாபாரிகள் எல்லோரும் செல்ல உள்ளதால் நாளை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை முழுவதும் அடைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்…..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!

Thu May 4 , 2023
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலியில் இந்த மாதம் இறுதிக்கு பதியேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்சமயம் முறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில், இதன் தொடர்ச்சியாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகளிடம் அனைத்து விவரங்களையும் மே மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் […]

You May Like