பொதுவாக அமைதியாக இருப்பவர்களால் கோபப்பட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அமைதியாக இருப்பவர்களுக்கும் கோபம் வரும். அப்படி கோபம் வந்தால் அதனை கட்டுப்படுத்திக் கொள்ளும் வித்தை அவர்களுக்கு தெரியும்.
ஆனால் இன்னொரு சாராரால் அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அப்படி கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நபர்கள் கோபத்தின் உச்சத்தில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்து ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அடுத்துள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் எலவனாசூர்கோட்டை நம்பிகுளம் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து (35). இவர் கேரள மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செண்பகம்(32). இந்த தம்பதிகளுக்கு 4️ பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் கணவன், மனைவி இருவரும் தங்களுடைய குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று வந்தனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முன்னிட்டு பச்சமுத்துவும் அவருடைய மனைவி செண்பகமும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாகவே கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை என் காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆகவே கடந்த 28ஆம் தேதி இரவு மீண்டும் அவர்களுக்குள் சண்டை உண்டாகி கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு செண்பகம் உறங்குவதற்காக சென்று விட்டார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத பச்சமுத்து, தன்னுடைய மனைவியை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார்.
அதனடிப்படையில் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து மனைவி என்று கூட பார்க்காமல் செண்பகத்தின் தலையில் போட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் செண்பகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர். அப்போது அங்கு தங்களுடைய தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி உள்ளான அந்த 4️ குழந்தைகளும் கதறி அழுதனர். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.
ஆனால் அண்டை வீட்டார்கள் வருவதற்கு முன்னர் பச்சமுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதன் பிறகு இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் எலவனாசூர்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செண்பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அத்துடன் தலைமறைவான பச்சமுத்துவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் இந்த சூழ்நிலையில், கேரளாவுக்கு தப்ப முயற்சி செய்த பச்சமுத்துவை வாழவந்தான் குப்பம் பேருந்து நிலையமருகே காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் தலையில் கணவனே குழவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.