fbpx

ஆன்மாக்களுடன் பேச வைப்பதாக தெரிவித்த கேரளா மந்திரவாதி……! 2 கோடி ரூபாயை பறிகொடுத்த சென்னையை சேர்ந்த 51 வயது நபர்…..!

சென்னை புரசைவாக்கம் ஆண்டர்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் சிவகாமி(51). ஐடி நிறுவன ஊழியரான இவர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார்.

அந்த புகார் மனுவில், கடந்த 2005 ஆம் வருடம் நைஜீரியா நாட்டில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் நான் பணியாற்றி வந்தேன். என்னுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (52) என்பவரும் பணியாற்றி வந்தார் என கூறியுள்ளார்.

மேலும் அப்போது எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. தற்சமயம் நான் சென்னையில் வசிக்கின்றேன். நான் கடவுள் நம்பிக்கை மிகுந்த நபர் என்பதை அறிந்து கொண்ட சுப்பிரமணி, என்னை பல்வேறு ஆலயங்களுக்கு அழைத்துச் சென்றார் என்று கூறியுள்ளார்.

அத்துடன் இறந்து போன என்னுடைய தாய் புட்டபர்த்தி, சாய்பாபா ஆன்மாவுடன் என்னை பேச வைப்பதாக கூறினார். என்னுடைய வீட்டின் பூஜையறையில் இருக்கின்ற விபூதியை விழச் செய்தும், எலுமிச்சம் பழத்தை வரவழைத்தும் மந்திர, மாயாஜால வித்தைகளை செய்தும் என்னை ஏமாற்றினார் எனக் கூறியிருக்கிறார்.

இறந்து போன என்னுடைய தாயார் அவருடைய கனவில் வந்து பணம் வாங்கிக் கொள்ள சொன்னதாக தெரிவித்து, என்னிடம் இருந்து கடந்த 2015 ஆம் வருடம் முதல், 2018 ஆம் வருடம் வரையில் வாங்கி பரிவர்த்தனை மற்றும் ரொக்கமாக 2 கோடிக்கு மேல் பணத்தை வாங்கிக் கொண்டார் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நடுவே அவருடைய மோசடி எனக்கு தெரிய வந்தது. ஆகவே கொடுத்த பணத்தை நான் மீண்டும் கேட்டேன். ஆனாலும் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததுடன், என்னை மிரட்டினார். ஆகவே அவர் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, என்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அவர் தன்னுடைய புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு குறித்து சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு, துணை ஆணையர் மீனா, உதவி ஆணையர் ஜான் விக்டர் உள்ளிட்டோரின் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை அழைத்து வந்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Next Post

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த சடலம்….! காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

Fri May 12 , 2023
சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த். இவர் சென்ற 8ம் தேதி வீட்டின் முன் உள்ள சாலையில் காரை நிறுத்திவிட்டு சென்றார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மறுபடியும் காரை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அந்த காரின் பின் இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்கு ஆளானார். இது தொடர்பாக, அவர் வழங்கிய புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் […]

You May Like