fbpx

மதுரையில் இந்து முன்னணி கட்சி நிர்வாகி படுகொலை….! கூலிப்படை கைவரிசை….!

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவது தற்போது வாடிக்கையாகி விட்டது.இது போன்ற செயல்களை மாநில அரசும், காவல் துறையும் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று சொன்னாலும் கூட, அந்த நடவடிக்கை இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோத கும்பலை கட்டுப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

அந்த வகையில், மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்து மக்கள் கட்சியின் மதுரை தென் மாவட்ட துணைச் செயலாளராக இவர் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மணிகண்டனை சில மரும கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மிக தீவிரமாக இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அதோடு அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி தான் மணிகண்டன் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்ற விவரம் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து ஏட்டு ஹரிஹரபாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள் என்று ஹரிஹர பாபு விடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த கொலை குறித்து காவல்துறையினரின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது மணிகண்டனின் நகை கடைக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஜெய்ஹிந்த்புரம் தலைமை காவலர் தன்னுடைய மனைவியுடன் சென்று நகை வாங்கியிருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. வேலைக்கு சென்ற சமயத்தில் அவருடைய மனைவியுடன் மணிகண்டன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதே போல ஒரு நாள் தந்த என் மனைவியுடன் மணிகண்டன் தனிமையில் இருந்ததை கண்ட ஏட்டு ஆத்திரமடைந்து கூலிப்படையை வைத்து மணிகண்டனை கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Next Post

சாலை ஓரத்தில் சடலமாக கிடந்த ஓட்டுநர் மரணத்தில் மர்மம்….! மனைவியின் புகாரில் காவல்துறையினர் விசாரணை….!

Fri Feb 3 , 2023
தமிழகத்தில் தற்போது அகால மரண செய்திகள் அதிகரித்து விட்டனர். அதாவது, விபத்து காரணமாக மரணம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர், தூங்கிக் கொண்டிருந்த நபர் தூக்கத்திலேயே உயிரிழப்பது, சாப்பாடு சாப்பிட்டு முடிந்த பின்பு மயங்கி விழுந்து உயிரிழப்பது, நின்று கொண்டிருந்த மனிதன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. அது இயற்கையான மரணமாக இருந்தால் கூட பரவாயில்லை இயற்கையான மரணம் போலவே ஜோடிக்கப்பட்ட […]

You May Like