fbpx

போலீசாரை அறிவாளால் வெட்டும் முயற்சி செய்து ரவுடி……! துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை……!

சென்ற 2 நாட்களுக்கு முன்னர் மதுரை வளர்நகர் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினரின் சார்பாக விசாரணை நடந்து வந்தது. காவல்துறையினரின் விசாரணையில் முக்கிய குற்றவாளி என்று வினோத் என்பவர் கண்டறியப்பட்டார்.

ஆகவே அவரை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வந்தனர். இதனை அறிந்து கொண்ட ரவுடி வினோத் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்ட சிறப்பு படை காவல்துறையினர், அவரை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்தனர்.

அப்போது அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த வினோத் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் காவலர்களை தாக்க முற்பட்டார். அப்போது காவலர்கள் தங்களுடைய தற்காப்புக்காக ரௌடி வினோத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த வினோத்தை உடனடியாக மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். மதுரை வண்டியூரை சேர்ந்த ரவுடி வினோத் மீது அடிதடி, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்திருக்கிறது.கடந்த சில தினங்களுக்கு முன்னால் திருச்சி மற்றும் சென்னையில் காவல ்துறையின் தாக்கிய ரவுடிகளை காவல்துறையினர் சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Post

காதலனுடன் தனிமையில் இருந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…..! விழுப்புரம் அருகே பரிதாபம்…..!

Tue Feb 28 , 2023
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற சிந்தாமணி கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுவனும் ஐயங்கோவில்ப்பட்டு கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி ஒருவரும் சிந்தாமணியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் அந்த சிறுவனும், சிறுவியும் நேற்று முன்தினம் இரவு விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று இருவரும் தனிமையில் உரையாடிக் […]

You May Like