fbpx

கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரால் மதுரையில் பரபரப்பு….!

மதுரை மாநகர் அண்ணா நகர் வெக்காளியம்மன் கோவில் திரு பகுதியில் இருக்கின்ற பெரியார் வீதி பகுதியில் ஒரு இளைஞர் மது குடித்துவிட்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் நேற்று அதே பகுதியில் மது போதையில் இருந்த அந்த இளைஞர் கையில் மிக நீண்ட அறிவாளுடன் அந்தப் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.மேலும் பொதுமக்களை அவர் மிரட்டியது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோ காட்சியில் அந்த பகுதியில் மிதிவண்டியில் சென்ற ஒரு முதியவரை அறிவாலை காட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி அந்த இளைஞர் மிரட்டுவது போன்ற காட்சி பதிவாகி இருக்கிறது இது தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் மதுரை மாநகரில் சில தினங்களாக கையில் பயங்கர ஆயுதங்களுடன் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கும் விதத்தில், அலைந்து திரிவதாக இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், கையில் ஆயுதத்துடன் பொதுமக்களை மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. இனி கவலை வேண்டாம்.. 24x7 கட்டணமில்லா எண் அறிமுகம்..

Wed Feb 15 , 2023
ஆதார், பதிவு நிலை மற்றும் பிற விவரங்கள் தொடர்பான அப்டேட்களை சரிபார்க்க UIDAI புதிய கட்டணமில்லா எண்ணை வெளியிட்டுள்ளது. இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்த அடையாள எண்ணை வழங்குவதற்காக 2012 ஆம் ஆண்டு UIDAI ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், முகவரி மற்றும் புகைப்படம் […]
ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்க வேண்டுமா..? புதிய செயல்முறை அறிமுகம்..!!

You May Like