திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்துள்ள ரெட்டி மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (46) நேற்று முன்தினம் தட்டி மாங்குடியில் இருந்து சிறுகனூர் பகுதிக்கு இவர் சென்று கொண்டிருந்தார் அப்போது பெருமாள் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த 42 வயது பெண் ஒருவர் சுரேஷிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
வாகனத்தை நிறுத்தி அந்த பெண்ணை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்ட சுரேஷ் சிறுகனூரை நோக்கி பயணமானார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று யோசிக்கிற வாகனத்தை நிறுத்திய சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
அத்துடன் இது குறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சுரேஷ் மீண்டும் அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து சிறுகனூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் டாஸ்மாக்கில் மது அருந்திக்கொண்டு இருந்த சுரேஷை கைது செய்து நீதிபதியின் முன்பு ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதோடு பாலியல் வன்கிழமைக்கு ஆளானதாக தெரிவிக்கப்படும் பெண் மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய 2வது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ரெட்டிமாங்குடி பகுதியில் இருக்கின்ற உறவினர் வீட்டிற்கு சென்று 3 நாட்களாக தங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். அதோடு இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.