கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அவரே களத்தில் இறங்கி உருளைக்கிழங்குகளை தரம் பிரித்தது அங்கு இருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கீழ்வரகு வழங்கப்பட இருப்பதாக கூறி இருக்கிறார்.
கேழ்வரகு உற்பத்தியை பெருக்கி தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து நியாய விலை கடைகளிலும் விநியோகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.