திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர திமுக துணைச் செயலாளர், திருவள்ளூர் நகராட்சி 16வது வார்டு திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன் இவரும் திமுக மாணவர் இளைஞர் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். இவர் அரசு மருத்துவமனை அருகே ஒரு ஆங்கில மருந்து கடையில் நடத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
திருவள்ளுவர் நகரில் ஜே என் சாலையில் அமைந்திருக்கின்ற அவருடைய மருந்து கடையை திறப்பதற்காக கலைவாணன் வருகை தந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வெறித்தனமாக கத்தியால் வெட்டி இருக்கிறது. வெட்டு காயங்களுடன் அலறல் சத்தம் கேட்டதால் அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
சென்ற வாரம் நண்பர்களுக்கு இடையேயான பிரச்சனையின் விளைவு காரணமாக, இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஆபத்தான நிலையில், கவுன்சிலரின் மகன் கலைவாணன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இவரை வெட்டியவர்கள் யார் என்று இதுவரையில் தெரியாததால் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.