fbpx

முதல்வருக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிய எதிர்க்கட்சித் தலைவர்….! தமிழகம் முழுவதும் பரபரப்பு…..!

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக உறுப்பினர் சேர்க்கையை துவங்கி வைக்கும் விதமாக, உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் 2️ கோடி பேரவை திமுக அதில் இணைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இத்தகைய நிலையில் அவருக்கு போட்டியாக சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது தமிழக முழுவதும் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையை துவங்க வேண்டும், அதிலும் அதிக அளவில் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவாக இருக்கிறது.

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை ஆரம்பித்து வைத்து பேசிய அவர், தெருதெருவாக சென்று உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். திமுகவிற்கு எதிராகவும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராகவும் தான் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

Next Post

BigBreaking……இன்னும் சற்று நேரத்தில் சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள முதலமைச்சர் ஸ்டாலின்…..!

Wed Apr 5 , 2023
நாட்டில் உள்நாட்டு நிலக்கரி விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முழுமூச்சுடன் செய்து வருகிறது. அதற்காக தமிழகம், பீகார் அசாம் போன்ற ஒரு சில மாநிலங்களில் புதிய நிலக்கரி சுரங்கங்களை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான இடங்களையும் மத்திய அரசு தேர்வு செய்து விட்டது. அந்த வகையில், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், அரியலூர், போன்ற பகுதிகளில் புதிய நிலக்கரியை சுரங்கங்களை ஏற்படுத்துவதற்கு மத்திய […]

You May Like