கோயமுத்தூர் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், அதில் இரண்டு பேர் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து, கோவை மாநகரில் இருக்கின்ற ரவுடிகளை கைது செய்வதற்கு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுவரையில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். தப்பி சென்றவர்களை துப்பாக்கியால் சூட்டும் காவல்துறையினர் பிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பல்வேறு குற்ற வழக்குகளின் தொடர்புடைய கவுதம் என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் காவல்துறையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இத்தகைய சூழலில் கௌதமின் நண்பர் ஒருவரை காவல் துறையினர் சூட்டு பிடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, அதிர்ச்சிக்குள்ளான கௌதம் தன்னை காவல் துறையினர் என்கவுண்டர் செய்ய முயற்சி செய்கிறார்கள், என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறுகிறார். இது ஒருபுறமிருக்க கௌதமியின் மனைவி மாமியார் மற்றும் அக்கா போன்றோரை காவல்துறையினர் கஞ்சா வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில், கோவையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கௌதம் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொண்டு இருக்கிறார்கள். பட்டாக்கத்தியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த பெண் வினோதினி தலைமறைவாக இருக்கின்ற நிலையில், மிக விரைவில் அவரும் சரணடைவார் என்று தகவல் கிடைத்திருக்கிறது.