விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் கதைக்களம் அண்ணன், தம்பி பாசம், கூட்டுக் குடும்ப பிணைப்பு என்று சென்றுகொண்டு இருக்கிறது.
தற்போது அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இருவர் அந்த குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில், மூர்த்தி உள்ளிட்ட இருவர் மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள்.
எப்படியாவது சமாதானம் பேசி வீட்டை விட்டு சென்ற தம்பிகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று தனமும், கதிரும் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த தொடரில் அடுத்து என்ன நடக்கும் என்பதை இனி ரசிகர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இத்தகைய நிலையில் தான் சமீபத்தில் இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி இந்த தொடரை விட்டு வெளியேறினார். இதற்குக் காரணம் கதைக்களம் வேறு விதமாக சென்று கொண்டிருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவாவின் மாமனராக நடித்து வரும் ஜனார்த்தனன் ஒரு பேட்டியில் ஒரு கலைஞன் என்றாலே அனைத்து விதமான கதாபத்திரங்களையும் ஏற்று நடிக்க தான் வேண்டும்.
இனி வரும் காலங்களில் இந்த தொடரில் தன்னுடைய கதாபாத்திரம் வில்லியைப்போல இருக்க உள்ளது என்பதால் அவர் வெளியேறி விட்டார் என கூறியுள்ளார்.
ஆனாலும் இதெல்லாம் ஒரு பிரச்சனையாக இருக்காது சாய் காயத்ரி ஒரு நல்ல நடிகை அவருக்கு வேறு ஏதோ பிரச்சனை உள்ளது. அதன் காரணமாகத்தான் அவர் விலகி விட்டார் என்று கூறியிருக்கிறார்.
.