கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதற்காக கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கொலை செய்வதால் அந்த பிரச்சனை தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சனை பெரிதாகத்தான் தொடங்கும்.
ஆனால் தற்போது இது யாருக்கும் புரிவதில்லை. தகராறு என்று வந்துவிட்டால் அந்த தகராறில் கோபம் ஏற்பட்டு விட்டால் அந்த கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைத்து விடுகிறார்கள்.
அந்த வகையில், திருப்பூர் அவிநாசிக்கு பக்கத்தில் தெக்கலூர் கிராமத்தில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சுகன்யா (30) விசைத்தறி தொழிலாளியான இவருக்கு, ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், 3வதாக கருமத்தம்பட்டி ராயர் பாளையம் பகுதியில் சேர்ந்த சரவணகுமார்(40) என்பவருடன் இவர் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இருவருக்கும் சண்டை உண்டானதில் 2 பேரும் அவிநாசி பகுதிக்கு வந்துள்ளனர். இதற்கு நடுவே தெக்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது மறுபடியும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது கோபத்தின் மிகுதியில் சரவணகுமார் தாக்கியதால் சுகன்யா உயிரிழந்துள்ளார். சுகன்யாவின் சரளத்தை தெக்கலூர் குப்பை கிடங்கில் வீசிவிட்டு சரவணக்குமார் திடீரென்று தலைமறைவாகிவிட்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி காவல்துறையினர் அந்த பகுதிக்குச் சென்று சுகன்யாவின் சடலத்தை வைத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். அதோடு தலைமுறைவாக இருக்கும் சரவணக்குமாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.