ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி அவனுடைய கோபம் தான். யார் ஒருவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வருகிறதோ, அந்த மனிதனால் யோசிக்கவே முடியாது ஒருவர் யோசிக்காமல் செய்யும் காரியம் எதுவாயினும் அதில் அவர் வெற்றியடைவது சாத்தியம் இல்லை.
புதுச்சேரி வில்லியனூர் ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(60) இவர் ஒரு கூலித் தொழிலாளி இவருடைய மனைவி லதா(55) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் இவர்களுடைய 2வது மகன் புகழ்மணி (24) இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு கேட்டு தன்னுடைய தாயிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
இதன் காரணமாக, இருவருக்கும் வாக்குவாதம் மூண்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட புகழ் மணி திடீரென்று தன்னுடைய தாய் லதா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதனை கண்ட தட்சிணாமூர்த்தி மனைவி தீயில் எரிவதை கண்டு தீயை அணைக்க முயற்சித்து இருக்கிறார்.
இதன் காரணமாக, தட்சிணாமூர்த்தி காயம் அடைந்தார் லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீக்காயம் அடைந்த தட்சிணாமூர்த்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக மங்கலம் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்து புகழ்மணியை கைது செய்தனர்.