கடலூர் அருகே அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணி பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வரும் முத்து, செல்வகுமாரி உள்ளிட்ட இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சென்ற வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆகவே, தற்போது செல்வகுமாரி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு எதிர்வரும் வாரம் வளைகாப்பு விழா நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, தெரிகிறது.
உறவினர்கள் அனைவரும் செல்வகுமாரியின் வளைகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு மூழ்கி இருந்த நிலையில், செல்வகுமாரி ஒரு விபரீத முடிவை மேற்கொண்டார்.
அதாவது, செல்வகுமாரி, நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதை கண்ட அவருடைய உறவினர்கள், உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் குறித்து, கேள்விப்பட்ட காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, இந்த மரணம் குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள், அதோடு, திருமணமாகி ஒரு வருட காலமாகின்ற நிலையில், வட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.