fbpx

அடுத்த வாரம் வளைகாப்பு, அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே….! நிறைமாத கர்ப்பிணி தற்கொலை, காரணம் என்ன…..?

கடலூர் அருகே அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணி பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வரும் முத்து, செல்வகுமாரி உள்ளிட்ட இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சென்ற வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆகவே, தற்போது செல்வகுமாரி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு எதிர்வரும் வாரம் வளைகாப்பு விழா நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, தெரிகிறது.

உறவினர்கள் அனைவரும் செல்வகுமாரியின் வளைகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு மூழ்கி இருந்த நிலையில், செல்வகுமாரி ஒரு விபரீத முடிவை மேற்கொண்டார்.

அதாவது, செல்வகுமாரி, நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதை கண்ட அவருடைய உறவினர்கள், உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் குறித்து, கேள்விப்பட்ட காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, இந்த மரணம் குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள், அதோடு, திருமணமாகி ஒரு வருட காலமாகின்ற நிலையில், வட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Next Post

பிரபல நடிகரின் மகள் நடிக்கும் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் துயரம்..!! மேக்கப் போடும்போதே சுருண்டு விழுந்து இளம்பெண் மரணம்..!!

Sun Sep 24 , 2023
சீரியல் படப்பிடிப்பு தளத்தில் ஒப்பனை பெண் திடீரென கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை, சினிமா என சமீபத்தில் பிரபலங்களின் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை அருகே நடந்து வந்த சீரியல் படப்பிடிப்பு தளத்திலேயே ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் […]

You May Like