fbpx

நர்சிங் கல்லூரி மாணவி மர்ம மரணம் – விடுதியில் நடந்தது என்ன போலீஸ் விசாரணை.!

நர்சிங் கல்லூரி மாணவி விடுதி அறையில் மர்மமாக கிடந்துள்ள சம்பவம் புழல் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ வயது 20. இவர் சென்னை புழலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை எல்லா மாணவிகளும் கல்லூரிக்கு சென்ற போது சுபஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை. இதனால் விடுதிக்கு வந்த மாணவிகள் அவரது அறையை தட்டி இருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் அரை கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.

அப்போது கட்டிலில் படுத்திருந்திருக்கிறார் சுபஸ்ரீ. அவரது பெயரை கூறி அழைத்தும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் கதவை உடைத்து மாணவிகள் உள்ளே சென்று பார்த்தபோது சுபஸ்ரீ இறந்த நிலையில் படுத்திருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து விடுதி நிர்வாகிகளை தொடர்பு கொண்ட மாணவிகள் இது தொடர்பாக காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் அவரது அறையை சோதனை செய்த காவல்துறையினர்  இது தொடர்பாக மற்ற மாணவிகளுடனும் விசாரணை செய்து வருகின்றனர். நர்சிங் மாணவி மர்மமான முறையில் விடுதியில் இருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணை பாலியல்.! 78 லட்ச ரூபாய் மோசடி! சினிமா தயாரிப்பாளர் கைது.!

Fri Feb 3 , 2023
சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வழக்கம்  நெடுங்காலமாகவே சினிமாவில் இருந்து வருகிறது. இந்நிலையில்  சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி இளம் பெண்ணை பாலியல் பலவந்தம் செய்த தயாரிப்பாளரை  கைது செய்து இருக்கிறது காவல்துறை. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சார்ந்தவர்  மார்ட்டின் செபஸ்டியன். இவர்  மலையாள சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர் மீது  திருச்சூரைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் […]

You May Like