fbpx

பெற்றோர்களே கவனம்… பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறை குறித்து புதிய தகவல்…!

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை அடங்கிய அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றும், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அளிக்கப்பட்டு, பின்னர் அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அட்டவணைப்படி அக்டோபர் 6-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறும் என்று செய்தி வெளியாகியது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது; தற்போது வரை வாய்வழி அறிவுறுத்தலாகத்தான் இருக்கிறது. அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அப்படி வெளியிட்டால் தான் இது உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

அட்டகாசமான அறிவிப்பு... நிலம் வாங்க இருக்கும் நபர்களுக்கு 50% மானியம் வழங்கப்படும்...! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை...!

Sun Sep 18 , 2022
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்கள் நிலம் வாங்க மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக […]

You May Like