கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 10.08.2022, புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 (negotiable instrument act 1881-ன் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற 03.09.2022, சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.