fbpx

2024-ம் ஆண்டிற்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்..‌! மத்திய அரசு தகவல்….

அனைவருக்கும் நியாயமான விலையில், தரமான மருந்துகள் கிடைப்பதற்கு மருந்து உற்பத்தித் துறை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் மூலம் பிரதமரின் தேசிய மக்கள் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏற்கெனவே 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

2024-ம்ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-மாக அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மொத்தம் 1,759 மருந்துகளும், 280 அறுவைச் சிகிச்சை உபகரணங்களும் இதில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்திய மருந்து உற்பத்தித்துறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைப்பின் பரிந்துரையின்படி பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 651 மாவட்டங்களில் புதிய மக்கள் மருந்தகங்கள் திறப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்தின் மூலம் சுய வேலைவாய்ப்பு பெற வகை செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.60,000 வரை சம்பளம்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Mon Feb 13 , 2023
கோவை மாவட்ட நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் உள்ள மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் காலிப் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்: மருத்துவ அலுவலர் (49) பல்நோக்கு சுகாதார பணியாளர் (49) சுகாதாரப் பணியாளர் வயது வரம்பு: மருத்துவ அலுவலர் (40) பல்நோக்கு சுகாதார பணியாளர் (35) சுகாதாரப் பணியாளர் (45) சம்பள விவரம்: […]

You May Like