fbpx

குட் நியூஸ்..! அரசு பணியில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை..! தமிழக அரசு அரசாணை வெளியீடு.‌‌..!

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.

மனித வள மேலாண்மை துறையின்‌ 2021-2022-ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கை தொடர்பான உரையின் போது, நிதி அமைச்சர் வேலைவாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப்‌ பணியிடங்களில்‌ பின்வரும்‌ இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌ என சட்டமன்ற பேரவையில்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கொரோனா தொற்றால்‌ பெற்றோர்‌ இருவரையும்‌ இழந்த இளைஞர்கள்‌, முதல்‌ தலைமுறைப்‌ பட்டதாரிகள்‌, தமிழக அரசுப்‌ பள்ளிகள்‌ தமிழ்‌ மொழியில்‌ பயின்ற நபர்கள்‌. 2010-2011-ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில்‌ தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு சாதிப்‌ பாகுபாடின்றியும்‌, வருமானத்தைக்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளாமலும்‌, அம்மாணவர்கள்‌ செலுத்த வேண்டிய கல்விக்‌ கட்டணம்‌ முழுவதையும்‌ சில நிபந்தனைகளுடன்‌ அரசே ஏற்று ஆணையிட்டது.

வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகள்‌, கொரோனா தொற்றால்‌ பெற்றோர்‌ இருவரையும்‌ இழந்தஇளைஞர்கள்‌ மற்றும்‌ தமிழக அரசுப்‌ பள்ளிகளில்‌ தமிழ்‌ மொழியில்‌ பயின்றநபர்களுக்கு முன்னுரிமை. அளிக்கப்படுவதற்காக இவ்வரசாணைவெளியிடப்பட்டது.

மேலும்‌, மேற்குறிப்பிட்ட அரசாணையின்‌ அடிப்படையில்‌,முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில்‌ பதிவுசெய்து கொள்வதற்கும்‌, முன்னுரிமை முறை பின்பற்றப்படும்‌ பணியாளர்‌ தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும்‌ பொருட்டும்‌, வேலைவாய்ப்பில்‌ முன்னுரிமை சான்றிதழ்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ்‌ வழங்கிடும்‌ வகையில்‌ சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவையான ஆணைகள் அறிவுறுத்தல்களை வழங்குமாறு மனிதவள மேலாண்மைத்துறை கேட்டுக்‌ கொண்டது.

Vignesh

Next Post

#Breaking: மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25 பேர் பலி...!

Sat Jul 1 , 2023
மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் 32 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி தெரிவித்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து 25 உடல்கள் சடலமாக […]

You May Like