சில நேரங்களில் இயற்கையின் மூலமாக வினோதமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அது போன்ற வினோதமான ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு அதிசய குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இது அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ரத்தன் கர் என்ற நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஹிசாரி சிங் என்ற 19 வயது இளம் பெண். இவருக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் வித்தியாசமான ஒரு குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையை பார்த்த மருத்துவர்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. குழந்தை நான்கு கைகள் நான்கு கால்கள் மற்றும் இரண்டு இதயங்களுடன் பிறந்திருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்திலேயே இறந்துவிட்டது. அந்த குழந்தையின் தாயார் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் ஏற்படும் குரோமோசோம் மற்றும் மரபணு மாற்றங்களால் இவ்வாறான சம்பவங்கள் நடக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.