தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள ஏரல் விவசாய நிலப் பரப்பில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக லாரிகளின் போக்குவரத்து இருந்து வருகிறது. இதனிடையில் விவசாய உரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியில், மூட்டைகள் இறுக்கமாக கயிறு கொண்டு கட்டப்பட்டிருந்தது.
ஏரல் பகுதிக்கு அருகே வந்த போது இதில் கட்டப் பட்டிருந்த கயிறானது அவிழ்ந்து உரமூட்டைகள் கீழே விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்த வழியாக வந்த ஆழ்வார்திருநகரில் வசித்து வரும் 30 வயதான சங்கரசுப்புவின் மகனான முத்து என்பவர் எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்துள்ளார்.
லாரியில் இருந்து உரமூட்டையுடன் கீழே விழுந்த கயிறானது முத்துவின் கழுத்தில் சுற்றிக் கொண்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் முத்து பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவமானத்தின் வீடியோவானது அங்கு சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது . மேலும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.