fbpx

வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் நியூஸ்.. EMI அதிகரிக்கப் போகிறது… ஏன் தெரியுமா..?

கடந்த சில மாதங்களில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை வீடு வாங்குபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இருப்பினும் குறுகிய கால மற்றும் வீட்டு விற்பனையும் வெற்றிபெறக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். புதிய வீட்டுக் கடனுக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவதை போலவே, வீட்டு விற்பனை எண்ணிக்கையும் குறுகிய காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்று தெரிவித்துள்ளனர்..

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும் போதெல்லாம், வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கின்றன.. அதன்படி ரிசர்வ் வங்கியின் தற்போதைய வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, பெரும்பாலான வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, கடன் வாங்கியவர்கள் தங்கள் கடனுக்கான மாதாந்திர EMI தொகையும் அதிகரித்துள்ளது..

குறிப்பாக வீட்டுக் கடன்கள் மற்றும் சொத்து மீதான கடன்களை பெற்ற வாடிக்கையாளர்களின் EMI கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வீட்டுக் கடன் விகிதங்களில் ஒவ்வொரு 1 சதவீத அதிகரிப்புக்கும், ஒவ்வொரு ரூ. 1 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ மாதத்திற்கு ரூ.60-70 அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. எனினும் பணவீக்க அழுத்தத்தை ரிசர்வ் வங்கி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தால், ரெப்போ ரேட் உயர்வுகளின் தற்போதைய போக்கு என்றென்றும் நிலைத்து இருக்காது என்றும், இறுதியில் விகிதங்கள் குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்..

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகஸ்ட் மாதத்தில் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 140 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி உள்ளது.. இதனால் அனைத்து வங்கிகளும் வீட்டுக் கடன் விகிதங்களை உயர்த்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அடக்கடவுளே... ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...? மத்திய சுகாதாரத்துறை தகவல்...!

Thu Aug 25 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 10,725 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 36 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 94,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like