fbpx

நடுவானில் பறந்த போது கேபினில் புகை… அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்…

நடுவானில் பறந்தபோது கேபினில் இருந்து புகை வந்ததால் ஜபல்பூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது..

இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.. அப்போது 5,000 அடி உயரத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் பறந்தபோது கேபினில் புகை வந்ததை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.. இதை தொடர்ந்து விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்..

15 நாட்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். ஜூன் 19 அன்று, 185 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் டெல்லி நோக்கிச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, அது புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் கேபின் குழுவினர் இன்ஜினில் இருந்து தீப்பொறிகளை கண்டனர். இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

மின்கட்டணம் என்ற பெயரில் பணத்தை திருடும் மோசடி கும்பல்... காவல்துறை எச்சரிக்கை...

Sat Jul 2 , 2022
ஆன்லைனில் பணம் செலுத்துவது பணமில்லா பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது என்றால், மறுபுறம், ஆன்லைன் மோசடி சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய ஆன்லைன் மோசடி நடைபெற்று வருகிறது.. தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின்வாரியத்தில் பேசுவதாக கூறும் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடும் மோசடிகள் சென்னையில் அதிகரித்து வருகின்றன… உங்கள் வீட்டின் மின்கட்டணம் கடந்த மாதம் அப்டேட் செய்யப்படவில்லை.. எனவே மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு […]

You May Like