fbpx

அதிரடி..‌! தனியார் வாகனத்தில் விதிகளை மீறி அரசு முத்திரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை…!

தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொதுவாக மத்திய மாநில அரசாங்க வேலைகளில் உள்ள ஊழியர்கள் தங்களது வீட்டு பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் வாகனங்களில் அரசாங்கத்தின் முத்திரைகளை பயன்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என பல முறை அரசாங்கமும், காவல்துறையும் கூறியுள்ளது. இந்ந விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

வாகனத்தில் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும்…?

வாகனம் வாங்குவோர் அந்த விதிமுறைகளை பின்பற்றி தான் நம்பர் பிளேட் அமைக்க வேண்டும். அதன் படி, வாகனங்களின் முன்னும் பின்னும் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். பின்னால் 35 மி.மீ உயரத்தில் 7 மி.மீ., அகலத்திலும் நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ. இருக்க வேண்டும். மூன்று சக்கர வாகனத்தை பொறுத்த வரையில், 40 மி.மீ உயரத்திலும், 7 மி.மீ அகலத்திலும், நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ இருக்க வேண்டும்.

Vignesh

Next Post

ஆவின் பால் விலை உயர்வு..!! உண்மை என்ன..? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்..!!

Wed Sep 27 , 2023
தமிழ்நாடு அரசின் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்களில் இனிப்புகள், பால் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஆவின் நெய், வெண்ணெய்க்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் உண்டு. கடந்த 9 மாதங்களில் ஆவின் நெய், வெண்ணெய் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவின் பால் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் […]

You May Like