fbpx

“இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு..” – மத்திய அரசு பாராட்டு .!

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் என அனைத்தும் மற்ற மாநிலங்களை விட சிறப்பான நிலையில் இருக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான அரசி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

நேற்று கோவையில் நடைபெற்ற விழாவில் 780 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டத்தை மாநில விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவை தவிர தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் மருத்துவமனைகள் நூலகங்கள் என தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது என மத்திய குடிநீர் வளங்கள் துறை பாராட்டு தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100% குடிநீர் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என மத்திய குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 74% வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழகத்தை பொறுத்தவரை 80.43% ஆக இருக்கிறது. தமிழகம் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்படுகிறது என வாழ்த்து தெரிவித்திருக்கிறது.

Next Post

"தாயுடன் ரகசிய உறவு.." ஆத்திரத்தில் நண்பனை வெட்டி சாய்த்த 17 வயது சிறுவன்.! வழக்கு விசாரணையில் ஏற்பட்ட ட்விஸ்ட்.!

Mon Feb 12 , 2024
மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது தாயுடன் தகாத உறவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பன் இருப்பதாக எண்ணி, 17 வயது சிறுவன் கொடூரமாக அவரை கொலை செய்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இறந்த நபருக்கும் அவரது தாய்க்கும் எந்த தவறான உறவும் இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கொலை செய்த சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது அப்பகுதியினரை அதிர்ச்சியால் ஆழ்த்தியது. கடந்த சனிக்கிழமை அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, […]

You May Like