உத்தரபிரதேச மாநிலம், கன்னூஜ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ஹரி ஓம் சிங் (47) என்பவர், தனது பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து அட்டையை கொடுத்துள்ளார். அதில் இருக்கும் செய்தியை படித்துவிட்டு கிழிக்குமாறு கூறியுள்ளார்.
இதை புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக டிசம்பர் 30ம் தேதி பள்ளியிலேயே கொடுத்துள்ளார். வீட்டுக்குச் சென்று படித்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசிரியர் ஹரி ஓம் சிங் மாணவிக்கு 12 வரிகள் கொண்ட காதல் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “நான் உன்னை நேசிக்கிறேன்.
நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். விடுமுறை நாட்களில் நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுவேன். எனவே உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை தொடர்பு கொள்ளவும். முடிந்தால் வந்து பார்க்கவும். நீங்கள் உண்மையிலேயே என்னை நேசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக என்னை வந்து பார்ப்பீர்கள்.
இறுதியாக, நீங்கள் இந்த படித்து முடித்தவுடன் , அதைக் கிழித்து விடுங்கள் எவருக்கும் காட்டாதீர்கள் என்றும எழுதியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை பற்றி பெற்றோர் ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியர் ஹரி ஓம் சிங் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பார் என்று நினைக்கையில் எதிர்மாறாக பெற்றோரை மிரட்டினார்.
பெற்றோர்களிணம் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், மாணவியை காணாமல் ஆக்கிவிடுவேன் என்றும் மிரட்டியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.