fbpx

கணவனுக்கு செய்த பச்சை துரோகம், கண் முன்னே உல்லாசம் நேரில் பார்த்த மாமனார்….! இறுதியில் கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கொடூரம்….!

மாமனார் கண் முன்னே கள்ளக்காதலனோடு, உல்லாசமாக இருந்த மருமகள், கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதியை பார்த்து, கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனி சேர்ந்தவர் கனகராஜ் (25). இவருக்கும், கருத்தானூரை சேர்ந்த கனகராஜின் அத்தை மகளான கவிக்குயில் (22) என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஊருக்கு வெளிப்புறமாக இருக்கின்ற ஒரு தோட்டத்தில் வீடு கட்டி, இருவரும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் தான், கவிக்குயில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே பக்கத்து ஊரான மலையான்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ்(24) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு நடுவே, கவிக்குயில் கனகராஜை திருமணம் செய்து கொண்ட பின்னரும், வெங்கடேசன் உடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த பழக்கம், நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் தான், நேற்று முன்தினம் கவிக்குயிலின் கணவர் கனகராஜ் வேலைக்கு சென்ற பிறகு, வெங்கடேஷை, வீட்டிற்கு வரவழைத்து, கவிக்குயில் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கண்ட கவிக்குயிலின் மாமனார் நடராஜன் அதிர்ச்சி அடைந்து, இருவரையும் கண்டித்து இருக்கிறார். அதாவது, வேலைக்கு சென்ற தன்னுடைய மகனிடம் நடந்ததை பற்றி தெரிவித்து, வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். பின்னர் கவிக்குயிலின் தாய் முத்துமாரி (50), அவருடைய அண்ணன் அன்பரசு (25) உள்ளிட்டோரையும் வரவழைத்துள்ளார். ஆகவே அனைவரும் சேர்ந்து, வெங்கடேஷை கண்டித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றியதால், அங்கு இருந்த அரிவாளை எடுத்து அன்பரசு, வெங்கடேஷை ஓட, ஓட விரட்டி, சரமாரியாக வெட்டியிருக்கிறார்.

இதனால் நிலைகுலைந்து போன அவருடைய இடது கை மணிக்கட்டு துண்டாக வெட்டுப்பட்டு விழுந்தது. அதோடு, விரல்கள், முகம் உள்ளிட்டவற்றில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, அன்பரசு மற்றும் கனகராஜ் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் காதலன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்ட கவிக்குயில், அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது கிணற்றில், ஐந்தடியில் தண்ணீர் இருந்ததால், லேசான காயங்களோடு அவர் உயிர் தப்பி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ஊத்துமலை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, வெங்கடேஷை மீட்டு, சங்கரன் கோவில் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கிணற்றில் கிடந்த கவிக்குயிலை தீயணைப்பு படை வீரர்களின் உதவியோடு, மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, கணகராஜ், அன்பரசு, நடராஜன் மற்றும் முத்துமாரி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Post

’என் அப்பா பேச்சை கேட்டிருந்தால் வாழ்க்கை சிதறி போயிருக்கும்’..!! ’எல்லாமே தவறான அறிவுரைகள்’..!! வனிதா விஜயகுமார் ஓபன் டாக்

Tue Aug 29 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் வனிதா விஜயகுமார். இதையடுத்து, அவர் தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார். பிரபல நடிகரான விஜயகுமாரின் மகளான இவர் தனது குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ”தன்னுடைய வாழ்க்கை சீரழிந்ததற்கு என்னுடைய அப்பா தான் காரணம் என்று கூறியிருக்கிறார். நான் இப்போது மனதளவில் வலுவான […]

You May Like