fbpx

மார்ச் 15-ம் தேதி வரை டைம்….! மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்…!

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும்மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் இந்தியாவில் தீவிரமடைந்தது.

இதை அடுத்து ஒரே சீனா கொள்கையை மாலத்தீவு உறுதியாக ஆதரிக்கிறது என மாலத்தீவு பிரதமர் கூறினார். தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. சீனாவின் இறையாண்மையை குறைத்த மதிப்பிடும் எந்த ஒரு விஷயத்தையும் மாலத்தீவு எதிர்க்கும். தைவானுடன் அதிகாரபூர்வ உறவை மாலத்தீவு ஒருபோதும் கொள்ளாது. சீனாவின் உள் விவகாரங்களில் வெளிப்புற தலையீட்டை மாலத்தீவு எதிர்க்கிறது. தேசிய ஒருங்கிணைப்புக்காக சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மாலத்தீவு ஆதரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 15ம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும். வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான் என மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள், மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்கள், கண்காணிப்பு விமானங்களை பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

இலங்கை கடற்படையால் 12 தமிழக மீனவர்கள் கைது...! முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்...!

Mon Jan 15 , 2024
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்தில்; இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதி உள்ள […]

You May Like