fbpx

அதிர்ச்சியில் தமிழகம்… 36 மணி நேரத்தில் 15 கொலைகள்‌…? அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்…!

தமிழகத்தில் கடந்த 34 மணி நேரத்தில் 12 கொலைகள்‌ மட்டுமே நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது

இது கறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்து36 மணி நேரத்தில்‌ 15 கொலைகள்‌ நடந்ததாக சில ஊடகச்‌ செய்திகளில்‌ மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில்‌ 22.08.2022 அன்று 7 கொலைகளும்‌, 23.08.2022 அன்று கொலைகள்‌ மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில்‌ பட்டியிலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள்‌ ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ முந்திய நாட்களில்‌ நடைபெற்றவை.

மேலும்‌ பெரும்பாலான கொலை சம்பவங்கள்‌ குடும்ப உறுப்பினர்கள்‌, தனிநபர்களிடையே உள்ள முன்‌ விரோதம்‌ காரணமாக நடந்துள்ளது.2022 ஆம்‌ ஆண்டு ஜனவரி முதல்‌ ஜூலை வரை 940 கொலைகள்‌ நடந்துள்ளன. கடந்த 2021-ல்‌ இதே காலகட்டத்தில்‌ 925 கொலைகளும்‌ 2019 ஆம்‌ ஆண்டு 1041 கொலைகளும்‌ நிகழ்ந்துள்ளது. ஆகவே முந்தைய 2019 ஆம்‌ ஆண்டை ஒப்பிடுகையில்‌, இந்தாண்டு, 101 கொலைச்‌ சம்பவங்களின்‌ எண்ணிக்கை குறைந்துள்ளன என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Vignesh

Next Post

அடி தூள்... செப்டம்பர் 30-ம் தேதி வரை 6.70% வரை அதிக வட்டி...! வங்கி வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு...!

Thu Aug 25 , 2022
ஐடிபிஐ வங்கி சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐடிபிஐ வங்கி ‘அம்ரித் மஹோத்சவ் சில்லறை கால வைப்புத்தொகை’ என்ற சிறப்பு, வரையறுக்கப்பட்ட நிலையான வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது 500-நாள் முதிர்வுக் காலத்தைக் கொண்டுள்ளது. இது செப்டம்பர் 30ஆம் தேதி வரை சந்தாவிற்கு செல்லுபடியாகும். இது சாதாரண சேமிப்பு திட்டங்களை விட 6.70% வரை அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஐடிபிஐ வங்கி சமீபத்தில் தனது 1,100 […]

You May Like