fbpx

சற்றுமுன்…! இந்த நான்கு மாவட்டத்திற்கு பொது விடுமுறை…! தமிழக அரசு அதிரடி உத்தரவு

அதி தீவிர கனமழை காரணமாக இன்று நான்கு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தீவிரமடைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம், புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. அத்துடன், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

These four districts are public holidays

Vignesh

Next Post

மதியம் சாப்பிட்டவுடன் செம தூக்கம் வருதா..? அப்படி தூங்குவது நல்லதா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

Wed Oct 16 , 2024
Researchers say that half an hour nap in the afternoon is good for the body and drinking tea or coffee after waking up can double the energy in the body.

You May Like