fbpx

ஒரு கல்லூரி பேராசிரியர் செய்ற வேலைய இது….? தாய்க்கும் மகளுக்கும் ஒன்றாக பாலியல் தொல்லை வழங்கிய பேராசிரியர் கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை இறுதியில் என்ன நடந்தது தெரியுமா….?

ஒரு கல்லூரி மாணவிக்கு அந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரே பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அதோடு, மட்டுமல்லாமல், அந்த மாணவியின் தாயாருக்கும் அந்த பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

இதன் காரணமாக, அந்த மாணவி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், பேராசிரியராக லியோ ஸ்டான்லி. என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தான், அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கும், அவருடைய தாயாருக்கும் பேராசிரியர் ஸ்டான்லி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, அந்த கல்லூரி நிர்வாகத்திலும் கல்லூரி மாணவியின் தாயார் புகார் வழங்கியிருக்கிறார். ஆனாலும், அந்த புகார் மீது கல்லூரி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தாய் வழங்கிய புகார் மீது, கல்லூரி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற காரணத்தால், அந்த கல்லூரி மாணவி, மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் சரியான நேரத்தில், அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டார். அதோடு, இந்த விவகாரம் குறித்து, கல்லூரி நிர்வாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அந்த மாணவிக்கும், அவருடைய தாய்க்கும் பேராசிரியர் ஸ்டான்லி பாலியல் தொல்லை வழங்கினார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, கல்லூரி பேராசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Next Post

அடப்பாவி நம்பி விட்டுட்டு போனா இப்படி பண்ணிட்டிய….! மகளின் வாழ்வை சீரழித்த காதலன் தாய் எடுத்த அதிரடி முடிவு….!

Sun Sep 10 , 2023
கணவனை இழந்த இளம் பெண் ஒருவருக்கு முகநூல் மூலமாக ஒரு ஆண் நபருடைய நட்பு கிடைத்துள்ளது. அந்த நட்பு நாளடைவில், அவருடைய வாழ்வை மட்டும் அல்லாமல், அவருடைய மகளின் சீரழித்த அவலம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில், கணவனை இழந்த ஒரு பெண் தன்னுடைய மூன்று குழந்தைகளோடு, தனியாக வசித்து வந்தார். அவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (40) என்பவருக்கும், முகநூல் பக்கம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளம் […]

You May Like