fbpx

காதலி திட்டியதால் காதலன் தற்கொலை…..! அப்படி என்னதான் சொல்லி இருப்பார்….?

காதலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், காதலி நான் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று திட்டியதால், மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் கார்த்திகேயன் (25). இவர் தற்சமயம் பெற்றோருடன் வெள்ளகோவில் அருகே இருக்கின்ற சிவநாதபுரத்தில் விசைத்தறி கூடத்தில், வேலை பார்த்து வருகிறார்.

கார்த்திகேயன், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால், கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இந்த நாள்தோறும் குடித்துவிட்டு, தன்னுடைய காதலிக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி, நீ இப்படி குடித்துவிட்டு, குடிக்கு அடிமையாக இருந்தால், நான் எப்படி உன்னை திருமணம் செய்து கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

ஆகவே கார்த்திகேயனின் காதலி இவ்வாறு கூறியதால், மனமுடைந்து காணப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தான், வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து, மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இந்த சம்பவம் தொடர்பாக, வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

Akshay Kumar | 55 வயதில் இந்திய குடியுரிமை..!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அக்‌ஷய் குமார்..!!

Tue Aug 15 , 2023
கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றிருந்தார். அண்மையில் ‘ஒஎம்ஜி 2’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், 55 வயதாகும் அக்‌ஷய் குமார் கடந்த 2000இல் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றார். அதன் பின், பல படங்களில் இந்திய நாட்டின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமான […]

You May Like