fbpx

மக்களே…! இன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை…! அரசு சார்பில் இலவசமாக மருத்துவ சிகிச்சை முகாம்…!

முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ மு.கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவையெட்டி சேலம்‌ மாவட்டத்தில்‌ இன்று பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெறவுள்ளது.

முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும்‌ வகையில்‌ மாவட்டம் தோறும்‌ துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள்‌ நடத்திட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அதன்‌ ஒரு பகுதியாக மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை சார்பில்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ பொதுமக்கள்‌ பயன்‌ பெறும்‌வகையில்‌ பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ இன்று காலை 08.00 மணி முதல்‌ மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில்‌ சேலம்‌ மாநகராட்சி அஸ்தம்பட்டி பகுதியிலுள்ள மணக்காடு அரசு பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி, ஜலகண்டாபுரம்‌, அரசு பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி, கெங்கவல்லி, அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி, மேச்சேரி, அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி மற்றும்‌ ஏற்காடு, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில்‌ சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

கட்டுப்பாடு..!தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் இவர்களுக்கு தடை...! அரசு புதிய உத்தரவு...!

Sat Jun 24 , 2023
தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் ஆவண எழுத்தர்கள் நுழைய கூடாது’ என, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு, அலுவல் நிமித்தமாக சார் – பதிவாளர் அழைக்காத நிலையில், ஆவண எழுத்தர்கள் யாரும், சார் – பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது. சார் – பதிவாளர்கள் இதை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். இந்த […]

You May Like