fbpx

பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்…! இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை…!

இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டு வைத்தனர். இந்த நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ( 10.02.2024 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்...! வரும் 2-ம் தேதி மாபெரும் முகாம் நடைபெற உள்ளது...!

Tue Jan 30 , 2024
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 2-ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. எனவே இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 02.02.2024 அன்று நடைபெறவுள்ளது. எனவே, […]

You May Like