fbpx

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளை தான் கடைசி நாள்….! உடனே இ-சேவை மையம் மூலம் பதிவு செய்ய வேண்டும்…!

விவசாயிகள் நடப்பு 2023-2024ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 22.11.2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பொது சேவை மையங்கள் மூலம் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாதவர்கள் உரிய ஆவணங்களுடன் நாளை மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும் . நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

"இயக்குனர் மணிரத்தினத்தால் வாழ்க்கையே நாசமா போச்சு…" பிரபல சினிமா தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு.!

Tue Nov 21 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்தினம். பன்லவி அணு பல்லவி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் மௌன ராகம், பகல் நிலவு, இதய கோயில், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய் குரு என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். சமீபத்தில் கூட கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிட்டார். இந்தத் திரைப்படம் […]

You May Like