டெல்லி போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை ரிக்டர் 6.8 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.
முக்கியமாக டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.