fbpx

ஒருவரின் அஜாக்கிரதையால் பறிபோன 4 உயிர்கள்.! மணப்பாறை அருகே கொடூர விபத்து.!

காரில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குடும்பமே பலியான சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த தங்கசாமி தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த , நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறையின் அருகே கார் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்தது.

அதனால் , சாலைத் தடுப்பைத் தாண்டி எதிரில் வந்த மற்றொரு காரின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான இரண்டு கார்களின் மீது, அவற்றின் பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தங்கசாமியின் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் உறவினர்களான ரஞ்சனா, பூஜா ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதையடுத்து மற்றொரு காரில் வந்த பத்மா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.எதிர்பாரத இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Rupa

Next Post

மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதல்வருக்கு நடந்த சம்பவம்.!

Thu Oct 27 , 2022
பிரதமர் மோடி குஜராத் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் , அப்போது அங்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலுக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளையும் அவர் அறிவித்து வருகின்றார். இத்தகைய நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் […]

You May Like