fbpx

#திருச்சி: காப்பீட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு கணவனை கொன்ற மனைவி மற்றும் காதலர்..!

மருங்காபுரி ஒன்றியம் அக்கியம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ராம் (40). துவரங்குறிச்சியை அடுத்த திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் சென்றபோது சென்னையில் இடியாப்ப வியாபாரம் செய்து வந்த இவரை, வெட்டுப்பட்டு ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார்.

வாகன விபத்து தொடர்பாக, துவரங்குறிச்சி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், ராமின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை துவரங்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவரைக் கொல்ல முயன்றவர்களைக் கைது செய்யக் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் ராமா் மனைவி கண்மணி (30), தனது காதலன் அருள்குமாா்(20) இருவரும் அந்த பகுதியில் கிராம நிா்வாக அலுவலரிடம் சரணடைந்துள்ளனர். விசாரணையில் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு ராமரை கொன்றதாக வாக்குமூலத்தை கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் , இருவரையும் துவரங்குறிச்சி போலீஸாா் கைது செய்துள்ளது. அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியுள்ளனர். 

Baskar

Next Post

#கோவை: ஓரினச் சேர்க்கை ஆப்.. ஆண் செவிலியருக்கு ஏற்பட்ட விபரீதம்..!

Tue Jan 3 , 2023
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 33 வயதான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். Grindr என்ற ஆப் மூலம் ராக்கிக்கு அறிமுகமானார். இதற்கிடையில் இருவரும் நண்பர்களாக இருந்ததால், இருவரும் நேருக்கு நேர் சந்திக்க முடிவு செய்தனர்.  இதையடுத்து இருவரும் கோவை சரவணம்பட்டியில் நேரில் சந்தித்துவிட்டு துடியலூர் சாலையில் சென்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசிக் கொண்டனர். அப்போது திடீரென கத்தியை காட்டி மிரட்டிய […]
’சாலையோர ரோமியோக்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’..! சிறுமியை ITEM என அழைத்த நபர்..!! பரபரப்பு தீர்ப்பு

You May Like