சென்னையில் அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
மெட்ராஸ் ஐ பாதிப்பு தமிழகத்தில் வேகமாக பரவி வருகின்றது. சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறுகையில், ’’ அந்த மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது பெரிய வலியை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், மருத்துவர்கள் சிகிச்சையில் எந்த குறைவும் இல்லை. மருத்துவர்கள் காரணத்திற்கு மருத்துவரின் கவனக்குறைவும், அலச்சியமும்மான. மருத்துவர்கள் பெயரில் ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள். ஆனால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கூடாது. என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கொலை குற்றமாக கருதக்கூடாது. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு நாங்கள் உறுதுணையாகஇருப்போம் என தெரிவித்தனர்.’’ என்றார்.. இருப்பினும் மருத்துவர்கள் மீதான நடவடிக்கை பற்றி எதுவும் தெளிவாக எதுவும் கூறவில்லை.
23-ம் தேதி 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெறும். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அன்றே வெளியிடப்படும்.’’என தெரிவித்தார்.