fbpx

மருத்துவ சிகிச்சைக்கு வர மறுத்த மகளை கொடூரமாக கொலை செய்த தாய்……! திருச்சி அருகே பரபரப்பு சம்பவம்….!

ஒரு தாயின் மனநிலை என்பது எப்போதும் தன்னுடைய மகனோ, மகளோ அது யாராக இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். பெற்ற தாயாக இருந்தாலும் சரி, வளர்த்த தாயாக இருந்தாலும் சரி தாயின் குணம் எப்போதும் மாறாது.

ஆனால் இதற்கு நேர் எதிரும் மாறாக திருச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருக்கின்ற அரிய நாம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர போஸ் இவர் சென்னையில் இருக்கின்ற உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மஞ்சுளா இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் தான் மஞ்சுளா கடந்த 6 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. ஆனால் சமீப காலமாக மஞ்சுளாவிற்கு மனநல பாதிக்கு ஏற்பட்டதால் கடந்த ஒரு வருட காலமாக அவர் பணிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

மஞ்சுளாவிற்கு மனநலம் சரியில்லை என்ற காரணத்தால், அவரை அவருடைய தாய் அன்னக்கிளி தன்னுடைய பராமரிப்பில் சமயபுரம் அருகே இருக்கின்ற மாகாளிக்குடி கிராமத்தில் வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் தான் மஞ்சுளாவின் தாய் அன்னக்கிளி கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக மனு வழங்க அரியனாம் பேட்டை கிராமத்திற்கு நேற்று அழைத்து வந்ததாக தெரிகிறது. பின்னர் கலைஞர் மகளிர் உரிமை தொகை மனு பதிவு செய்வது குறித்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக சென்னையில் இருக்கின்ற பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்று மஞ்சுளாவிடம் அன்னக்கிளி தெரிவித்து இருக்கிறார்.

ஆனாலும் மஞ்சுளா மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார். அதோடு, மட்டுமல்லாமல் அன்னக்கிளியிடம் தேவையில்லாத தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட அன்னக்கிளி, தன்னுடைய மகள் மஞ்சுளாவின் தலையில் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் மஞ்சுளா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த தொட்டியம் காவல்துறை ஆய்வாளர் முத்தையன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மஞ்சுளாவின்சடலத்தை கைப்பற்றி, முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் பெற்ற மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய் அன்னக்கிளியை கைது செய்து, அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்த்துறையினர் .

Next Post

பிசிசிஐ-யை சரம் மாறியாக கேள்வி கேட்ட வெங்கடேஷ் பிரசாத்..!

Mon Jul 31 , 2023
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் ரசிகர்கள் கடுப்பாகி வருகின்றனர். இந்த நிலையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள வெங்கடேஷ் பிரசாத் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கேவலமாக விளையாடி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். சமீப காலமாக இந்திய அணி வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ஒரு […]

You May Like