காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.. அப்போது மோடி ஆட்சியின் கீழ் இந்திய ஜனநாயகம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் உரையாற்றிய மோடி, ராகுல்காந்தியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.. சமீபத்திய இங்கிலாந்து பயணத்தின் போது, ராகுல் காந்தி கூறிய கருத்துகள் குறித்து இந்தியாவின் பாரம்பரியத்தையும் அதன் குடிமக்களையும் அவமதிக்கும் செயல் என்று பிரதமர் மோடி கூறினார்.
நேற்று பேசிய பிரதமர் மோடி “ லண்டனில் இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்விகள் எழுப்பப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் பல நூற்றாண்டுகளாக நம் வரலாற்றால் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த உலகில் எந்த சக்தியும் இந்தியாவின் ஜனநாயக மரபுகளை சேதப்படுத்த முடியாது. இருந்தபோதிலும் சிலர் தொடர்ந்து அதை சேதப்படுத்த முயற்சிக்கின்றனர்.. ”என்று கூறினார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ், பிரதமரின் கொள்கைகளை விமர்சிப்பது, நாட்டின் மீதான விமர்சனமாக எப்போது மாறியது என்று கேள்வி எழுப்பியது. காங்கிரஸ் ஊடகங்கள் மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா இதுகுறித்து கூறுகையில், “உங்கள் கொள்கைகள் மீதான விமர்சனம் எப்போது முதல் நாட்டின் விமர்சனமாக மாறியது? நீங்கள் ஒரு பிரதமர் மட்டுமே, நீங்கள் நாடு இல்லை, கடவுளும் அல்ல, படைப்பாளியும் அல்ல” என்று தெரிவித்தார்..
மேலும் பேசிய அவர் “ இந்த நாட்டின் பெரியவர்கள் மற்றும் முன்னோர்களை துஷ்பிரயோகம் செய்வதில் பிரதமர் மோடி 9 ஆண்டுகளை வீணடித்துவிட்டார். கடந்த 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று கூறி பிரதமர் மூன்று தலைமுறைகளை அவமதிக்கிறார்.. மிஸ்டர் பிரதமரே, நீங்கள் ஜனநாயகத்தை தாக்குகிறீர்கள், அதனால்தான் அது பற்றி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. உங்களைப் பற்றி உங்களுக்கு சில அவநம்பிக்கைகள் உள்ளன. நீங்கள் தான் பிரதமர், நீங்கள் கடவுள் இல்லை, நீங்கள் படைத்தவர் அல்ல, நீங்கள் சூரியனை உதிக்க வேண்டாம்.. உங்களைப் பற்றிய இந்த சந்தேகங்களை நீக்குங்கள்..” என்று தெரிவித்தார்..