fbpx

அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை கொன்ற தம்பி.. பகீர் வாக்குமூலம்..!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜானிபூர் பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அர்வால் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், ஜெகனாபாத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த பெண்ணுக்கு பிப்ரவரியில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் திருமணம் நின்று போய்விட்டது. இதனை தொடர்ந்து ரஞ்சித்தின் தம்பி பிஜேந்திரன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி இருக்கிறார். அதன்பின், பிஜேந்திரனும், அந்த பெண்ணும் அடிக்கடி போனில் பேசி வந்தனர்.

நவம்பர் 16 அன்று, பிஜேந்திரன் அந்தப் பெண்ணை, அர்வால் பஜாரில் தன்னை சந்திக்க வருமாறு அழைத்தார். அதையடுத்து, விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற பிறகு, பிஜேந்திரன் அப்பெண்ணின் உடலை மக்கள் நடமாட்டம் இல்லாத புதர்கள் நிறைந்த பகுதியில் புதைத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். உடலை அடக்கம் செய்வதற்கு முன் அந்த பெண்ணின் உடலில் 10 கிலோ உப்பை கொட்டியாதாக கூறியுள்ளார். ஏனெனில் அப்போது தான் உடல் விரைவாக அழுகும் எனவும் தெரிவித்துள்ளார். 

Baskar

Next Post

நடிகை கனகாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!

Sat Dec 24 , 2022
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தந்தையுடன் சொத்துப் பிரச்னை, காதல் பிரச்சனை என பல பிரச்னைகளால் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார் கனகா.  இதனால் பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில், வீட்டை விட்டு வெளியே வராத அளவுக்கு தனிமையாகிவிட்டார். இந்நிலையில், நடிகை கனகா வீட்டில் இருந்து […]

You May Like