அடிதூள்…! தமிழகத்தில் 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள்…! ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு…!

தமிழகத்தில் 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 15,700 செவிலியர் பட்டதாரிகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் அமையவுள்ளன. அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் செவிலியர் கல்வியில் தரம், நியாயமான கல்வி கட்டணம் ஆகியவற்றை உறுதி செய்யும். செவிலியர் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக்கல்வி செயலாளர் ஆகியோர் இதற்கான பணிகளை கண்காணிக்கவுள்ளனர்.

Vignesh

Next Post

எடியூரப்பா சவால்...! எனது ரத்தத்தில் எழுதிய கொடுக்கிறேன்...! ஜெகதீஷ் ஷெட்டர் தோற்பது உறுதி...!

Thu Apr 27 , 2023
கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தேர்தல் பிரச்சார பிரச்சார கூட்டத்தில் கூறுகையில், ஷெட்டர் பாஜகவை முதுகில் குத்தியுள்ளார் என்றும், ஹூப்ளி-தர்வாட்-மத்திய தொகுதியில் போட்டியிடும் அவர் வெற்றி பெற மாட்டார் என்பதை ரத்தத்தில் எழுதி கொடுக்கலாம் என்றும் […]
1190273 bs yediyurappa jagadish shettar

You May Like