கோவில்களினுள் செல்போன் எடுத்து செல்வதற்கு தடையா..? அதிரடி உத்தரவு..!

பல கோவில்களில் செல்போனில் படம் எடுப்பதை கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. திருமலை திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்போன் எடுத்த செல்ல கூடாது என்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை என்றும் அரசு தெறிவித்துள்ளது.


நாம் எடுத்துச் செல்லும் செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்கே இருக்கும் லாக்கர்களில் வைத்துவிட்டு செல்ல வேண்டும். இதன் பின்னர் சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து அவரவர் செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் இவ்வாறு செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணமாக கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் தடையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத்துறையின்  ஆணையருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைமுறை இனி அனைத்துக் கோவில்களிலும் பின்பற்றப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser5

Next Post

உணவுப் பொருட்களுக்கு அடித்து கொள்ளும் மக்கள்.. பரிதாப நிலை..!

Sat Dec 3 , 2022
சில காலங்களாக பிரித்தானியாவில் உணவுகளின் விலையானது பல மடங்காக அதிகரித்த நிலையில், மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் அரசாங்க உதவியினையே நம்பி வாழ்ந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில், பிரித்தானியா பகுதியில் வாழும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் லண்டனில் உள்ள, டெஸ்கோ சூப்பர் மார்கெட் ஒன்றில் நடந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்ந காணொளியில் […]
Screenshot 2022 12 03 11 47 44 84 a71c66a550bc09ef2792e9ddf4b16f7a

You May Like