தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் பிரசாத் யாதவ் (58) கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5-ஆம் தேதி இரவு, குலசேகரன்பட்டினம்-உடன்குடி சாலையில் உள்ள தருவைகுளம் மதுபானக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்த அர்ஜூன் பிரசாத் யாதவ், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் தீ வைத்துக் […]

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்தியா முதல் தோல்வியை பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்தாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 23 ரன்களிலும், […]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும், ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியபிரதேசத்தில் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது இந்தியாவையே உலுக்கியுள்ளது. தொடர்ந்து இந்த இருமல் மருந்து பயன்படுத்திய குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. இதுவரை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 16 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் […]

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. நாம் அன்றாடம் சுவைக்கும் தித்திப்பான உணவுப் பொருட்களில் ஒளிந்திருக்கும் ஒரு கசப்பான உண்மையை சமூக வலைத்தளப் பதிவு மூலம் உணவு பாதுகாப்புத் துறை வெளிப்படுத்தியுள்ளது. இது இனிப்புச் சுவை மீது அதீதப் பிரியம் கொண்டவர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை தனது அதிகாரப்பூர்வ சமூக […]

போட்டி கட்சிகள், வேட்பாளர்களுக்கு எதிரான காணொலி காட்சிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கை 2025 அக்டோபர் 6 அன்று வெளியிடப்பட்டதை அடுத்து, நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல்கட்சிகளின் சமூக ஊடகம் உட்பட இணைய தளத்தில் […]

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். காசா நகரத்தின் மீது நேற்று இரவு இஸ்ரேல் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தில் வாக்களிக்க இஸ்ரேலிய அமைச்சரவை கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது. காசா நகரத்தின் சப்ரா […]

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் தொழில், அரசியல், தனியார் மற்றும் அரசுப் பணிகளில், ஆண்களுக்கு இணையாக பல்வேறு பொறுப்புகளில் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். பல்வேறு அத்துமீறல்கள், சவால்கள் மற்றும் தடைகளைத் தகர்த்து, அவற்றைச் சாதனைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுகின்றனர். மேலும், பணிக்குச் செல்லும் பெண்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, பணியிடத்தில் ஏற்படும் சவால்களையும் சமாளித்து வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பெண்களின் நலனை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது […]