ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: சேலம் மாவட்டத்தில், ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, உலகளவில் சுமார் 1.4 பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவலையான விஷயம் என்னவென்றால், இந்த நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது, மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை அல்லது தங்களுக்கு இந்த நிலை இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். WHO […]
வீட்டில் வாஸ்து சரியாக அமையவில்லை என்றால் கஷ்டம் வரும் என்று பலரும் நம்புகின்றனர். அப்படிப்பட்ட சூழலில், வீட்டில் சிலர் குபேரர் சிலையை வைப்பார்கள். ‘சிரிக்கும் புத்தர்’ என்று அழைக்கப்படும் இந்த சிலை, மகிழ்ச்சியின் சின்னமாக அறியப்படுகிறது. இது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தருவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். குபேரர் எப்போதும் பண மூட்டையுடன் இருப்பதால், இந்த சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வம் பெருகும் என்றும், நமது […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் விவரங்களை சரிசெய்ய வேண்டுமென தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் – ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் […]
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை தொடர் ட்துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் நேற்று […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புனித தலம். இங்கு, பக்தர்களுக்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி, ஒரு சாதாரண பிரசாதமாக மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியுடன் கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது. சிவபெருமானின் புனித சின்னமாக விபூதி கருதப்பட்டாலும், திருச்செந்தூரில் அது பன்னீர் இலையில் வழங்கப்படுவதால், அதற்கு தனிச் சிறப்பு உண்டு. இதன் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சுமார் […]
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக போற்றி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ் புதல்வன்”, “முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை” போன்ற பல்வேறு […]
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கிறது. இதற்கிடையே லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும், மாநில அந்தஸ்து வழங்கக்கோரி காலச்சார ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் திடீரென நேற்று வன்முறை வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். போராட்டத்தின் போது, மாணவர்கள் பாதுகாப்புப் […]
கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நீலகிரி தொகுதியில் பேசிய அவர்; நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார் உதயநிதி. அதிக கடன் வாங்குவதில், கமிஷன், ஊழலில், வாரிசு அரசியலில், ஸ்டிக்கர் […]
ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.87 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சமூகத் தணிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. […]

