நாடு முழுதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், முதியோர், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நாய்க்கடி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து கடந்த மாதம் 28ல் விசாரித்தது. தொடர்ந்து கடந்த 11ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
21 people sacrifice their lives to see God in Karnataka..
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆகஸ்ட் 23 காலை 09 .00 மணி வரை எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் […]
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தில் இருந்து வந்துள்ள மாணவர்களுக்கு, மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில தகுதியும், நிதிசார்ந்த ஆதரவும் வழங்கும் வகையில், மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026 கல்வியாண்டுக்கான புதியதும் புதுப்பித்தலும் செய்ய வேண்டிய கல்வி உதவித்தொகை (scholarship) திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), மேலாண்மை கழகங்கள் […]
விநாயகர் சதுர்த்தி என்பது பக்தி பூர்வமாகவும், ஆன்மீக ரீதியாகவும் தமிழர்கள் மத்தியில் மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வருகிற இந்த தினத்தில், வீடுகளில் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள், நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன. அந்த நைவேத்தியங்களில் முதன்மையானது கொழுக்கட்டை மற்றும் மோதகம். ஒரு காலத்தில், ஞானபாலி எனும் மன்னன், விநாயகரின் பக்தராக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தினசரி பூஜைகள், தியானங்கள் மூலம் விநாயகரை வழிபட்டு வந்தார். ஆனால், அவரது நாட்டில் […]
சாதாரணமாக கோதுமை மாவு, கடலை மாவு, மைதா, அரிசி மாவு போன்ற மாவுகளை தான் பயன்படுத்துவோம். ஆனால் இதைத் தவிர்த்து பயன்படுத்தக்கூடிய பல மாவு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் மாவு. தேங்காய் பால் எடுத்த பின்னர் இருக்கும் தேங்காயை உலர வைத்து மென்மையாக அரைத்து பயன்படுத்துவது. பேக்கிங் தொடங்கி பல சமையல் ரெசிபிகளில் இந்த தேங்காய் மாவு பயன்படுத்தலாம். சுவையுடன் உணவுக்கு நல்ல நறுமணம் கொடுக்கும். […]
நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் […]
இந்தியா, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இன்று (ஆகஸ்ட் 25) முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமலுக்கு வரும் புதிய சுங்க விதிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பதட்டங்கள் நிலவி வருகின்றன.அஞ்சல் துறை […]
ஜோதிட நம்பிக்கைகள் என்பது தமிழர்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தை வைத்து, கிரக நிலைகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் செய்யப்படும் பரிகாரங்கள் இன்று பலரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. தோஷங்களை சீர்செய்யவும், நல்ல பயன்களை அதிகரிக்கவும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இவை, சீரமைக்கும் ஆன்மீக வழிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த பரிகார முறைகள் பெரும்பாலும் நம்பிக்கையையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது. புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் […]

